சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

இலவச இணைப்பு

உங்கள் முன்
இரண்டு கவிதைகள் இருந்தன
ஒன்று நல்ல கவிதை
மற்றொன்று சுமாரானது
நான்கு வார்த்தைகள் நகர்த்திப் போட்டு
இரண்டு வரிகள் இணைத்தால்
சுமாரான கவிதையும்
பிரமாதமாகிவிடும்.
அதெற்கெல்லாம்
உங்களுக்கு நேரமில்லை
நீண்ட நாட்களாக
தீண்டப்படாமல்தான் இருந்தது
அந்தக் கவிதையும்.
இதெல்லாம் முன்னொரு காலத்தில்.
இப்போது
நீங்கள்தான் சுமந்து செல்கிறீர்கள்
இரண்டு கவிதைகளையுமே.
அந்தக் கவிதை வாங்கினால்
இந்தக் கவிதை இலவசம்
என்ற நிர்ப்பந்தத்தில்..

Labels: ,

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு