பூ
என் வீட்டுத் தோட்டத்தில்
ஏகப்பட்ட பூச்செடிகள்
பூக்கும், சிரிக்கும்
பின்பொருநாள் மரிக்கின்ற
பூக்களுக்கு மத்தியில்தான்
புஷ்பவதியானதெல்லாம்..
பதினேழு வயதில்
பெண்பார்த்து போனதை
பூக்களிடம் சொல்லி அழுதிருக்கிறேன்..
படித்த மாப்பிள்ளை
பட்டணத்து வாழ்க்கை என்றார்கள்.
நந்தவனம் உதறி
நகரம் வந்து சேர்ந்தேன்.
புன்னகை தொலைத்து,
ஃப்ளாட்களின் மத்தியிலே
இயங்கும் மனிதர்களித்தில்
பூக்களுக்கு ஏது முன்னுரிமை?..
இப்போதெல்லாம்
பூக்களைப் பற்றி
புத்தகத்தில் படிப்பதோடு சரி...
ஏகப்பட்ட பூச்செடிகள்
பூக்கும், சிரிக்கும்
பின்பொருநாள் மரிக்கின்ற
பூக்களுக்கு மத்தியில்தான்
புஷ்பவதியானதெல்லாம்..
பதினேழு வயதில்
பெண்பார்த்து போனதை
பூக்களிடம் சொல்லி அழுதிருக்கிறேன்..
படித்த மாப்பிள்ளை
பட்டணத்து வாழ்க்கை என்றார்கள்.
நந்தவனம் உதறி
நகரம் வந்து சேர்ந்தேன்.
புன்னகை தொலைத்து,
ஃப்ளாட்களின் மத்தியிலே
இயங்கும் மனிதர்களித்தில்
பூக்களுக்கு ஏது முன்னுரிமை?..
இப்போதெல்லாம்
பூக்களைப் பற்றி
புத்தகத்தில் படிப்பதோடு சரி...
Labels: கவிதை




1மறுமொழிகள்:
Good one. I remember having read this somewhere though...
Post a Comment
<< முகப்பு